அறத்துப்பால் (Aram)Chapter 35: துறவு
திருக்குறள் 347
Thirukkural Verse 347 — Renunciation
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு.
English Meaning
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
சாலமன் பாப்பையா
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
கலைஞர்
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன