அறத்துப்பால் (Aram)Chapter 36: மெய்யுணர்தல்
திருக்குறள் 351
Thirukkural Verse 351 — Knowledge of the True
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.
English Meaning
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
சாலமன் பாப்பையா
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
கலைஞர்
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது