அறத்துப்பால் (Aram)Chapter 36: மெய்யுணர்தல்
திருக்குறள் 352
Thirukkural Verse 352 — Knowledge of the True
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.
English Meaning
A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
சாலமன் பாப்பையா
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.
கலைஞர்
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்