அறத்துப்பால் (Aram)Chapter 37: அவா அறுத்தல்

    திருக்குறள் 367

    Thirukkural Verse 367 — அவா அறுத்தல்

    Thiruvalluvar

    அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்.


    English Meaning

    If a man thoroughly cut of all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

    சாலமன் பாப்பையா

    ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

    கலைஞர்

    கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்