அறத்துப்பால் (Aram)Chapter 37: அவா அறுத்தல்

    திருக்குறள் 368

    Thirukkural Verse 368 — அவா அறுத்தல்

    Thiruvalluvar

    அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.


    English Meaning

    There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

    சாலமன் பாப்பையா

    ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

    கலைஞர்

    ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்