அறத்துப்பால் (Aram)Chapter 37: அவா அறுத்தல்
திருக்குறள் 369
Thirukkural Verse 369 — அவா அறுத்தல்
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
English Meaning
Even while in this body, joy will never depart (from the mind,in which) desire, that sorrow of sorrows, has been destroyed.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
சாலமன் பாப்பையா
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
கலைஞர்
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்