பொருட்பால் (Porul)Chapter 39: இறைமாட்சி
திருக்குறள் 388
Thirukkural Verse 388 — The Greatness of a King
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்.
English Meaning
That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
கலைஞர்
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்