பொருட்பால் (Porul)Chapter 39: இறைமாட்சி

    திருக்குறள் 389

    Thirukkural Verse 389 — The Greatness of a King

    Thiruvalluvar

    செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.


    English Meaning

    The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

    சாலமன் பாப்பையா

    இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

    கலைஞர்

    காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்