பொருட்பால் (Porul)Chapter 39: இறைமாட்சி

    திருக்குறள் 390

    Thirukkural Verse 390 — The Greatness of a King

    Thiruvalluvar

    கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி.


    English Meaning

    He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

    சாலமன் பாப்பையா

    தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

    கலைஞர்

    நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்