பொருட்பால் (Porul)Chapter 40: கல்வி
திருக்குறள் 391
Thirukkural Verse 391 — Learning
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
English Meaning
Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
கலைஞர்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்