பொருட்பால் (Porul)Chapter 40: கல்வி

    திருக்குறள் 392

    Thirukkural Verse 392 — Learning

    Thiruvalluvar

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.


    English Meaning

    Letters and numbers are the two eyes of man.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

    சாலமன் பாப்பையா

    வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

    கலைஞர்

    எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்