பொருட்பால் (Porul)Chapter 40: கல்வி
திருக்குறள் 393
Thirukkural Verse 393 — Learning
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.
English Meaning
The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
சாலமன் பாப்பையா
கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
கலைஞர்
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்