அறத்துப்பால் (Aram)Chapter 4: அரண் வலியுறுத்தல்

    திருக்குறள் 39

    Thirukkural Verse 39 — அரண் வலியுறுத்தல்

    Thiruvalluvar

    அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் புறத்த புகழும் இல.


    English Meaning

    Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

    சாலமன் பாப்பையா

    அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா

    கலைஞர்

    தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது