அறத்துப்பால் (Aram)Chapter 4: அரண் வலியுறுத்தல்
திருக்குறள் 39
Thirukkural Verse 39 — அரண் வலியுறுத்தல்
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் புறத்த புகழும் இல.
English Meaning
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
சாலமன் பாப்பையா
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா
கலைஞர்
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது