அறத்துப்பால் (Aram)Chapter 4: அரண் வலியுறுத்தல்
திருக்குறள் 40
Thirukkural Verse 40 — அரண் வலியுறுத்தல்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.
English Meaning
That is virtue which each ought to do, and that is vice which each should shun.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
சாலமன் பாப்பையா
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
கலைஞர்
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்