அறத்துப்பால் (Aram)Chapter 5: இல்வாழ்க்கை
திருக்குறள் 41
Thirukkural Verse 41 — Domestic Life
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.
English Meaning
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
சாலமன் பாப்பையா
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
கலைஞர்
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்