அறத்துப்பால் (Aram)Chapter 5: இல்வாழ்க்கை

    திருக்குறள் 42

    Thirukkural Verse 42 — Domestic Life

    Thiruvalluvar

    துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.


    English Meaning

    He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

    சாலமன் பாப்பையா

    மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்

    கலைஞர்

    பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்