பொருட்பால் (Porul)Chapter 41: கல்லாமை

    திருக்குறள் 403

    Thirukkural Verse 403 — Ignorance

    Thiruvalluvar

    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.


    English Meaning

    The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

    சாலமன் பாப்பையா

    கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

    கலைஞர்

    கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்