பொருட்பால் (Porul)Chapter 41: கல்லாமை

    திருக்குறள் 404

    Thirukkural Verse 404 — Ignorance

    Thiruvalluvar

    கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.


    English Meaning

    Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

    சாலமன் பாப்பையா

    படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

    கலைஞர்

    கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்