பொருட்பால் (Porul)Chapter 41: கல்லாமை
திருக்குறள் 405
Thirukkural Verse 405 — Ignorance
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
English Meaning
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned)
Share this result
Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.
சாலமன் பாப்பையா
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
கலைஞர்
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்