பொருட்பால் (Porul)Chapter 41: கல்லாமை

    திருக்குறள் 405

    Thirukkural Verse 405 — Ignorance

    Thiruvalluvar

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.


    English Meaning

    The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned)

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

    சாலமன் பாப்பையா

    படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

    கலைஞர்

    கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்