பொருட்பால் (Porul)Chapter 43: அறிவுடைமை

    திருக்குறள் 428

    Thirukkural Verse 428 — Possession of Wisdom

    Thiruvalluvar

    அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.


    English Meaning

    Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

    சாலமன் பாப்பையா

    பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

    கலைஞர்

    அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்