பொருட்பால் (Porul)Chapter 43: அறிவுடைமை
திருக்குறள் 429
Thirukkural Verse 429 — Possession of Wisdom
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.
English Meaning
No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
கலைஞர்
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது