பொருட்பால் (Porul)Chapter 44: குற்றங்கடிதல்

    திருக்குறள் 431

    Thirukkural Verse 431 — Guarding Against Faults

    Thiruvalluvar

    செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.


    English Meaning

    Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

    சாலமன் பாப்பையா

    தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

    கலைஞர்

    இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்