பொருட்பால் (Porul)Chapter 44: குற்றங்கடிதல்

    திருக்குறள் 432

    Thirukkural Verse 432 — Guarding Against Faults

    Thiruvalluvar

    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.


    English Meaning

    Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

    சாலமன் பாப்பையா

    நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

    கலைஞர்

    மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்