பொருட்பால் (Porul)Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள் 442
Thirukkural Verse 442 — Associating with the Great
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.
English Meaning
Let (a king) procure and kindly care for men who can overcome dificulties when they occur, and guard against them before they happen.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.
கலைஞர்
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்