பொருட்பால் (Porul)Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள் 443
Thirukkural Verse 443 — Associating with the Great
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
English Meaning
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
சாலமன் பாப்பையா
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
கலைஞர்
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்