பொருட்பால் (Porul)Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்

    திருக்குறள் 445

    Thirukkural Verse 445 — Associating with the Great

    Thiruvalluvar

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.


    English Meaning

    As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

    கலைஞர்

    கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்