பொருட்பால் (Porul)Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்

    திருக்குறள் 446

    Thirukkural Verse 446 — Associating with the Great

    Thiruvalluvar

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்.


    English Meaning

    There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

    சாலமன் பாப்பையா

    தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

    கலைஞர்

    அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது