பொருட்பால் (Porul)Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்

    திருக்குறள் 447

    Thirukkural Verse 447 — Associating with the Great

    Thiruvalluvar

    இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.


    English Meaning

    Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

    சாலமன் பாப்பையா

    தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

    கலைஞர்

    இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?