பொருட்பால் (Porul)Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள் 448
Thirukkural Verse 448 — Associating with the Great
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.
English Meaning
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
சாலமன் பாப்பையா
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
கலைஞர்
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்