பொருட்பால் (Porul)Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்

    திருக்குறள் 449

    Thirukkural Verse 449 — Associating with the Great

    Thiruvalluvar

    முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.


    English Meaning

    There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

    சாலமன் பாப்பையா

    முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

    கலைஞர்

    கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்