பொருட்பால் (Porul)Chapter 45: பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள் 450
Thirukkural Verse 450 — Associating with the Great
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
English Meaning
It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.
கலைஞர்
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்