பொருட்பால் (Porul)Chapter 46: சிற்றினம் சேராமை
திருக்குறள் 451
Thirukkural Verse 451 — Avoiding Mean Associations
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
English Meaning
(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
சாலமன் பாப்பையா
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
கலைஞர்
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்