பொருட்பால் (Porul)Chapter 46: சிற்றினம் சேராமை

    திருக்குறள் 452

    Thirukkural Verse 452 — Avoiding Mean Associations

    Thiruvalluvar

    நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.


    English Meaning

    As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

    சாலமன் பாப்பையா

    தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

    கலைஞர்

    சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்