பொருட்பால் (Porul)Chapter 46: சிற்றினம் சேராமை
திருக்குறள் 460
Thirukkural Verse 460 — Avoiding Mean Associations
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்.
English Meaning
There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
கலைஞர்
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை