பொருட்பால் (Porul)Chapter 47: தெரிந்து செயல்வகை
திருக்குறள் 468
Thirukkural Verse 468 — Acting After Deliberation
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.
English Meaning
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
சாலமன் பாப்பையா
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.
கலைஞர்
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்