பொருட்பால் (Porul)Chapter 47: தெரிந்து செயல்வகை

    திருக்குறள் 469

    Thirukkural Verse 469 — Acting After Deliberation

    Thiruvalluvar

    நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.


    English Meaning

    There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

    சாலமன் பாப்பையா

    அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

    கலைஞர்

    ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்