பொருட்பால் (Porul)Chapter 47: தெரிந்து செயல்வகை
திருக்குறள் 470
Thirukkural Verse 470 — Acting After Deliberation
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு.
English Meaning
Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா
தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.
கலைஞர்
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்