பொருட்பால் (Porul)Chapter 48: வலியறிதல்

    திருக்குறள் 473

    Thirukkural Verse 473 — Knowing One's Strength

    Thiruvalluvar

    உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.


    English Meaning

    There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

    சாலமன் பாப்பையா

    தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

    கலைஞர்

    தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு