பொருட்பால் (Porul)Chapter 48: வலியறிதல்

    திருக்குறள் 474

    Thirukkural Verse 474 — Knowing One's Strength

    Thiruvalluvar

    அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.


    English Meaning

    He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

    சாலமன் பாப்பையா

    பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

    கலைஞர்

    மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்