பொருட்பால் (Porul)Chapter 49: காலம் அறிதல்
திருக்குறள் 483
Thirukkural Verse 483 — காலம் அறிதல்
அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின்.
English Meaning
Is there anything dificult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
சாலமன் பாப்பையா
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?
கலைஞர்
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை