பொருட்பால் (Porul)Chapter 49: காலம் அறிதல்
திருக்குறள் 484
Thirukkural Verse 484 — காலம் அறிதல்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.
English Meaning
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
சாலமன் பாப்பையா
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
கலைஞர்
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்