பொருட்பால் (Porul)Chapter 49: காலம் அறிதல்
திருக்குறள் 485
Thirukkural Verse 485 — காலம் அறிதல்
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
English Meaning
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
சாலமன் பாப்பையா
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
கலைஞர்
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்