பொருட்பால் (Porul)Chapter 51: தெரிந்து தெளிதல்

    திருக்குறள் 507

    Thirukkural Verse 507 — Testing and Trusting

    Thiruvalluvar

    காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும்.


    English Meaning

    To choose ignorant men, through partiality, is the height of folly.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

    சாலமன் பாப்பையா

    அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

    கலைஞர்

    அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்