பொருட்பால் (Porul)Chapter 51: தெரிந்து தெளிதல்

    திருக்குறள் 508

    Thirukkural Verse 508 — Testing and Trusting

    Thiruvalluvar

    தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.


    English Meaning

    Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

    சாலமன் பாப்பையா

    நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

    கலைஞர்

    ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்