பொருட்பால் (Porul)Chapter 51: தெரிந்து தெளிதல்
திருக்குறள் 509
Thirukkural Verse 509 — Testing and Trusting
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.
English Meaning
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
சாலமன் பாப்பையா
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
கலைஞர்
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது