பொருட்பால் (Porul)Chapter 53: சுற்றந் தழால்

    திருக்குறள் 522

    Thirukkural Verse 522 — Cherishing Kinsmen

    Thiruvalluvar

    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்.


    English Meaning

    If (a man’s) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever- increasing wealth.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

    சாலமன் பாப்பையா

    ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

    கலைஞர்

    எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்