பொருட்பால் (Porul)Chapter 53: சுற்றந் தழால்

    திருக்குறள் 523

    Thirukkural Verse 523 — Cherishing Kinsmen

    Thiruvalluvar

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.


    English Meaning

    The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

    சாலமன் பாப்பையா

    சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

    கலைஞர்

    உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்