பொருட்பால் (Porul)Chapter 53: சுற்றந் தழால்

    திருக்குறள் 525

    Thirukkural Verse 525 — Cherishing Kinsmen

    Thiruvalluvar

    கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.


    English Meaning

    He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

    சாலமன் பாப்பையா

    ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.

    கலைஞர்

    வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்