பொருட்பால் (Porul)Chapter 53: சுற்றந் தழால்
திருக்குறள் 526
Thirukkural Verse 526 — Cherishing Kinsmen
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்.
English Meaning
No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
சாலமன் பாப்பையா
ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.
கலைஞர்
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்