பொருட்பால் (Porul)Chapter 54: பொச்சாவாமை

    திருக்குறள் 531

    Thirukkural Verse 531 — Not Forgetting

    Thiruvalluvar

    இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


    English Meaning

    More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

    சாலமன் பாப்பையா

    மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

    கலைஞர்

    அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது